2021ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியிருந்தன. இவ் உயர்தர பரீட்சை முடிவுகளின்படி தென்மராட்சி வலயத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முதன்னிலை பெற்றுள்ளது.

மாகாண கல்வி திணைக்களம் – வட மாகாணத்தால் அண்மையில் க.பொ.த உயர்தர பரீட்சை – 2021 இன் யாழ்ப்பாண மாவட்ட பெறுபேறுகளின் தேர்ச்சி சதவீத பகுப்பாய்வு  வெளியிடப்பட்டது.

இதில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி 70.99% தேர்ச்சி சதவீதத்தை பெற்றுக்கொண்டுள்ளது. 262 மாணவர்கள் தோற்றி 186 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளார்கள். தரவரிசை அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றிய பாடசாலைகளில் நான்காவதாகவும், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றிய பாடசாலைகளில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது.

விஞ்ஞான பிரிவில் 3 மாணவர் 3A சித்திகளையும், கணிதப் பிரிவில் 8 மாணவர் 3A சித்திகளையும், 2 மாணவர் 2A, B சித்திகளையும்,  வணிகப்பிரிவில் 1 மாணவர் 3A சித்திகளையும், கலைப் பிரிவில் 1 மாணவர் 3 A சித்திகளையும் 8 மாணவர்கள் 2A சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில்  1 மாணவர் 3 A சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இவர்களை வழிநடத்திய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துகளும்.

Leave a Comment