சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் புதிய நிர்வாக சபையின் முதலாவது கூட்டம் ஆனது 12.03.2022 அன்று மாலை 4.30 மணியளவில் கல்லூரி பிரதான மண்டபத்தில் தலைவர் திரு.ந சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் சித்திரை நினைவுகூரப்பட இருக்கும் முன்னாள் அதிபர் திரு பூ வெற்றிவேலு அவர்களின் நினைவு நூற்றாண்டு குறித்தும், அது தொடர்பாக செய்யப்படும் அபிவிருத்திகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து அதிபர் அவர்களால் பாடசாலையின் பிரதான அபிவிருத்தி திட்டம் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டது.

Leave a Comment